செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (10:11 IST)

மீண்டும் நடிப்பில் இறங்கிய மேக்னா ராஜ்!

நடிகை மேக்னா ராஜ் கணவர் இறப்புக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் இறங்கியுள்ளார்.

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், தற்ப்போது அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்றுள்ளார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் இப்போது மீண்டும் அவர் நடிப்பில் ஆர்வமாக இறங்கியுள்ளார். அவர் சீரியலில் நடிக்கும் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.