1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (10:33 IST)

இறந்த கணவரின் கட் அவுட்டை வைத்து வளைகாப்பு நடத்திய மேக்னா ராஜ்!

சமீபத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் வளைகாப்பு நடத்தியுள்ளார்.

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், தற்ப்போது அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது மேக்னா ராஜிற்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தியுள்ளனர். அதில் அவர் கணவரின் கட் அவுட்டை வைத்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளனர்.