ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:59 IST)

இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான மேக்னா ராஜ் ? – சோகத்துக்குப் பின் நடந்த மகிழ்ச்சி!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி  சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இவர் கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், தற்ப்போது அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது மேக்னா ராஜுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான செய்தி இன்னும் வெளியாகவில்லை.