1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (07:15 IST)

என்னால் வெளிய கூட வரமுடியல ரூ.2000 பணம் அனுப்பு - கெஞ்சிய மீரா மிதுன்!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக விஜய் , சூர்யா , ரஜினி என பெரிய நடிகர்களை குறித்து அவதூறு பேசி வம்பிழுத்து வருகிறார்.

இதனால் அந்த நடிகர்களின் ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைத்தளங்களில் கண்டம் செய்து வருகின்றனர். அந்தவகையில் மீரா மிதுனை ஆரம்பதில் இருந்தே திட்டி தீர்த்து வரும் ஜோ மைக்கேல் தற்ப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா மிதுன் யாரோ ஒருவரிடம் பணம் கேட்டு கெஞ்சிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். அதில், இப்போது தன்னால் வெளியில் வர முடியாது என்று கூறி தனக்கு ஒரு 2000 ரூபாய் அனுப்பச் சொல்லி வாட்ஸ் ஆப்பில் மீரா மெஸேஜ் செய்து கேட்ட ஸ்க்ரீன் சாட் ஒன்றை ஜோ மைக்கேல் வெளியிட்டு கிண்டல் அடித்துள்ளார். இதனை கண்ட பலரும் மாடல் அழகிக்கே இந்த நிலைமையா? என ட்ரோல் செய்து வருகின்றனர்.