1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (10:12 IST)

ஷங்கருக்கு கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னாரா? இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா?

இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் கதையை கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை தற்போது தொடங்க உள்ளார்.

இந்த படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி கொடுத்துள்ளாராம். இதுவரை ஷங்கர் படத்துக்கு அவரேதான் கதை எழுதுவார். ஆனால் முதல் முறையாக வேறொருவரின் கதையை அவர் படமாக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் கதை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் கதையில் கார்த்திக் சுப்பராஜின் பங்கு என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் ஒரு ஒன் லைன் மட்டுமே சொன்னதாகவும், அதை ஷங்கர்தான் முழுக்கதையாக மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கதையில் ஷங்கர் பெயர்தான் வரும் என்றும் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி என்று டைட்டிலில் போடப்படும் என தெரிகிறது.