ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (12:19 IST)

ஐடி ரெய்ட்.. ரூ.5 கோடி காசோலை பறிமுதல்....எனக்குக் கவலையில்லை - தனுஷ் பட நடிகை

வருமான வரிச்சோதனை குறித்து எனக்குக் கவலை ஏதும் இல்லை என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் ஆடுகளம் படத்தில் ஹீரோயினான அறிமுகம் ஆனவர் டாப்ஸி. அதன்பிறகு இவர் ஆரம்பம்,  காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட் படங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தி டாப்ஸி மற்றும் அனுராப் காஷ்யப் ஆகிய இருவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து நடிகை டாப்ஸி கருத்துத் தெரிவித்துள்ளார்.

வரிமான வரிச்சோதனை பற்றி எனக்கு கவலை எதுவுமில்லை; பாரிஸில் உள்ள எனது வீட்டிற்கான சாவிகள் மற்றும் நான் நிராகரித்த  ரூ.5 கோடிக்கான காசோலைகளை மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். இது மட்டுமே எனக்குப் பாதிப்பு ஏற்பட்டது என டாபி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் பதிவிட்டுள்ளார்.