1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:20 IST)

ஜெய்பீம் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும்… இயக்குனர் ஞானவேல் தகவல்!

சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல், தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். நேற்றோடு அந்த படம் ரிலீஸாகி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து அவர்  ஹிந்தியில்’தோசா கிங்’ என்ற படத்தை இயக்க உள்ள்தாக தகவல்கள் வெளியாகின. இந்த படம் சரவண பவன் ஜீவஜோதி வழக்கை பற்றிய கதை என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது இயக்குனர் ஞானவேல் கொடுத்துள்ள பேட்டியில் அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரையிடப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ஞானவேலிடம் “ஜெய்பீம் இரண்டாம் பாகம் உருவாகுமா” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “கண்டிப்பாக உருவாகும். அந்த படம் வழக்கறிஞர் சந்துரு எடுத்து நடத்திய வழக்குகளை அடிப்படையாக கொண்டு உருவாகும்” எனக் கூறியுள்ளார்.