செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (16:29 IST)

மலையாள காதலுக்கு ஆதரிக்கும் நம் மக்கள் லொஸ்லியா காதலை சேரவிடவில்லை - வசந்தபாலன் ஆதங்கம்!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லொஸ்லியா மற்றும் கவினின் காதல் மக்களுக்கு மிகுந்த வெறுப்பை தந்தது. இதனால் மக்கள் அனைவரும் அவர்கள் இருவரையும் வெறுத்து கிண்டலடித்து வந்தனர். ஆனால் இதே போல் நடத்தப்படும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பியர்ல் மானே ( Pearle Maaney ) மற்றும் ஸ்ரீனிஷ் ( Srinish Arvind ) என்ற ஜோடி அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு காதலித்து பின்னர் வெளியே வந்ததும்  திருமணம் செய்துகொண்டனர். 



 
ஆனால், இங்கு லொஸ்லியா மற்றும் கவினின் காதலை சேரன் சேராவிடவில்லை என்று கூறி பிரபல இயக்குனர் வசந்தபாலன் ஒரு நீண்ட கட்டுரையை எழுதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதை நீங்களே பாருங்கள்!