1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (10:17 IST)

ரூ.12 லட்சம் பணப்பெட்டி எடுத்திட்டு வெளியேறியது இவரா? அதிர்ச்சியில் ஆடியன்ஸ்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் யார் வெற்றியாளர் என்பதை பார்க்க ஆடியன்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது மொத்தம் 7 போட்டியாளர்கள் உள்ளனர் 
 
இதில் 4 பெரு இறுதி போட்டிக்கு தகுதி செய்யப்படுவார்கள். அதில் முதல், இரண்டாம், மூன்றாம் என மூன்று பேர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில் பணப்பெட்டி பரிசு தொகையாக வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம், 6 லட்சம், 7 லட்சம், 9 லட்சம் , 10 லட்சம், 11 லட்சம் , 12 லட்சம் என அதிகரித்துக் கொண்டே இருந்தது.   
இதனை யார் எடுத்துக்கொண்டு வெளியேறப்போவார் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றியாளராக சிபி அறிவிக்கப்படுவார் என ஆடியன்ஸ் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர் ரூ. 12 லட்சம் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துவிட்டனர்.