செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:43 IST)

‘வர்மா’வை ஏன் ரிலீஸ் செய்யவில்லை என இப்போது புரிகிறது: ஓடிடியில் பார்த்து நொந்துபோன ரசிகர்கள்

நடிகர் விக்ரம் தனது மகனின் முதல் படத்தை இயக்குனர் பாலா இயக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து ’அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக் படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். ஆனால் அந்த படம் முடிவடைந்தவுடன் போட்டுப் பார்த்த விக்ரம் அந்த படம் தனக்கு திருப்தி இல்லை என்றும், இந்த படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி தான் என்றும், தனது மகனின் முதல் படமே தோல்வி படமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் 
 
இதனை அடுத்து ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் உதவி இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படம் மீண்டும் உருவாக்கப்பட்டு அந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த நிலையில் பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த படம் இன்று முதல் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இது பாலாவின் படம் தானா என்பது சந்தேகமாக இருக்கிறது என்றும் அர்ஜுன் ரெட்டி படத்தை அப்படியே டப்பிங் செய்தது போல் இருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
விக்ரம் ஏன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்தார் என்பதை இந்த படத்தை பார்த்த பிறகு தெரிகிறது என்றும் அவரது முடிவு சரியானதுதான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலாவிடம் இருந்து இப்படி ஒரு மோசமான படமா? என்று விக்ரம் அதிர்ச்சி அடைந்தது போல் தற்போது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது