செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜூலை 2024 (15:33 IST)

'விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் துபாயில் ரூ.9 கோடி செலவு செய்த அஜித்.. என்ன வாங்கினார்?

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் நடந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அஜித் படக்குழுவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அஜித் உட்பட குழுவினர் சென்னை திருப்புகின்றனர் என்றும் இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் உட்பட அனைவரும் சென்னை திரும்பிய நிலையில் அஜித் மட்டும் இன்னும் சென்னை திரும்ப வில்லை என்றும் அவர் தற்போது துபாயில் இருப்பதாகவும் தகவல்களாகியுள்ளது.

ஏற்கனவே துபாயில் அவர் சொந்த வீடு வாங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரூபாய் ஒன்பது கோடி மதிப்புள்ள  ஃபெராரி   காரை அவர் துபாயில் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.   துபாயில் சிவப்பு நிற பெராரி காருடன் அஜித் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran