1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (11:09 IST)

ஏழை குழந்தைகளுக்கு 500 ரூபாய் நோட்டை கொடுத்த நடிகை: பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு

ஏழை குழந்தைகளுக்கு 500 ரூபாய் நோட்டை கொடுத்த நடிகை: பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு
ஏழை குழந்தைகளுக்கு 500 ரூபாய் நோட்டை நடிகை ஒருவர் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவரை பொதுமக்கள் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பிரபல பாலிவுட் நடிகை நேஹா காக்கர் குடிசைப் பகுதிகளுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்தி அங்கிருந்த குழந்தைகளை அழைத்து ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்து கொண்டிருந்தார்
 
இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் மிக வேகமாக பரவியதை அடுத்து பொதுமக்கள் அவருடைய காரை சூழ்ந்து கொண்டு 500 ரூபாய் நோட்டை கேட்டனர். தன்னை சுற்றி ஏராளமான கூட்டம் சூழ்ந்து விட்டதால் அதிர்ச்சி அடைந்த நடிகை நேஹா, உடனே பணம் விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டு காரில் வேகமாக சென்று விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது