1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By ஜே.பி,ஆர்
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2016 (09:52 IST)

பணம் கிடைப்பதால் நடிக்க வந்தேன் - ஐஸ்வர்யா மேனன் 'பளிச்' பேட்டி

கலையை காப்பத்த நடிக்க வந்தேன் என்று உதார் விடுகிறவர்களுக்கு மத்தியில், பாக்கெட் மணி கிடைக்குங்கிறதுக்காகத்தான் நடிக்க வந்தேன் என்று உண்மையை பளிச்சென்று சொல்கிறார் ஐஸ்வர்யா மேனன். அவரது பேட்டி...


 
 
உங்க சொந்த ஊர் எது...?
 
கேரளா.
 
எப்படி சரளமா தமிழ் பேசறீங்க?
 
என்னோட சொந்த ஊர் கேரளாவா இருந்தாலும், நான் பிறந்ததும் வளர்ந்ததும் தமிழ்நாட்ல தான்.
 
சென்னையிலா?
 
இல்லை, ஈரோடு. அங்கதான் பாரதி வித்யாபவன் ஸ்கூல்ல பள்ளிப் படிப்பை முடிச்சேன். 
 
கல்லூரிக்குப் போனீங்களா?
 
அது சென்னையில. எஸ்ஆர்எம் யூனிவர்சிட்டியில பிடெக் என்ஜினியரிங் முடிச்சேன். அதனால தமிழ் எனக்கு நல்லா தெரியும்.
 
சினிமாவுக்கு வருவதுக்கு முன்னால் என்ன பண்ணுனீங்க?
 
மாடலிங் பண்ணிட்டிருந்தேன். அப்புறம் சில விளம்பரப் படங்களிலும் நடித்தேன்.
 
சினிமாவுக்கு வர என்ன காரணம்?
 
என்னோட ப்ரெண்ட்ஸ் பாக்கெட் மணி கிடைக்கிறதால, ஹீரோயினுக்கு தோழியா சினிமாவில் நடிக்கப் போவாங்க. நானும் அப்படி செலவுக்கு பணம் கிடைக்கும்னுதான் சினிமாவில் நடிக்க வந்தேன். 
 
தோழியாக நடிச்சீங்களா?
 
காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலா பாலுக்கு தோழியா நடிச்சேன். அப்புறம், தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகா தோழியா நடிச்சேன்.
 
அடுத்து...?
 
இப்போ வீராங்கிற படத்துல ஹீரேயினா நடிக்கிறேன். கிருஷ்ணா ஹீரோ. ராஜாராம் இயக்குற இந்தப் படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் தயாரிக்குது.