1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 மே 2019 (09:00 IST)

யுவ்ராஜ் சிங் ஓய்வு ? – பிசிசிஐ உடன் பேச்சுவார்த்தை !

இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யுவ்ராஜ் சிங் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிறந்தவர் எனப் பலராலும் போற்றப்பட்டவர். சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இப்போது ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஓய்வு சம்மந்தமாக இப்போது அவர் பிசிசிஐ உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் பிசிசிஐ ஒப்புதலுடன் வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகள் மற்றும் கவுண்ட்டி போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய யுவ்ராஜ் சிங் முதல் 4 ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது 37 வயதாகும் யுவ்ராஜ் சிங் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது முடியாத காரணம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.