வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2019 (09:42 IST)

வெற்றி இல்லாட்டியும் டிரா பண்ணிடுவோம்! – நூலிழையில் எஸ்கேப் ஆன இந்திய அணி

உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய இந்திய அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து தோல்வியிலிருந்து தப்பியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து ஆட்டத்துக்கான தகுதி போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஆசியாவை சேர்ந்த 40 அணிகள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று ரவுண்டுகள் கொண்ட இந்த ஆட்டத்தில் இறுதியாக 12 அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த போட்டிகளில் இந்தியா அணி ‘இ’ பிரிவில் உள்ளது. தஜிகிஸ்தானில் நடந்த போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தானை எதிர் கொண்டது. ஆரம்பத்திலேயே ஆப்கானிஸ்தான் ஒரு கோல் போட்டுவிட, இந்தியாவின் நிலை சிக்கலுக்கு உள்ளானது. ஆப்கானிஸ்தானின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் கோல் முயற்சிகள் பலனளிக்காமல் போனது. போட்டி முடிய இருந்த கடைசி நிமிடங்களுக்குள் இந்தியா ஒரு கோல் வென்றது.

இதனால் 1-1 என்ற புள்ளிகளில் இந்தியா- ஆப்கானிஸ்தான் சமநிலையில் உள்ளதால் ஆட்டம் டிரா ஆனது. இதனால் தோல்வியிலிருந்து நூழிலையில் இந்திய அணி தப்பித்தது. இதுவரை நான்கு போட்டியில் 3 டிரா, ஒரு தோல்வி என்ற கணக்கில் உள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.