1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (16:09 IST)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு

cricket
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஜடேஜா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அணியில் சுப்மான் கில், சஞ்சு சாம்சன், ருத்துராஜ், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் சூர்யகுமார், ஸ்ரேயாஸ், இஷான் கிஷன், சாஹல் ஆகியோர்களும் தேர்வு செய்யபப்ட்டுள்ளது. மேலும் சர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், அக்சர், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்  ஆகியோர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்