வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:07 IST)

ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைக்க கூடாது: ஹர்பஜன் சிங்

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சரியாக செயல்படாததை தொடர்ந்து ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
 
முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படு மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஹர்பஜன் சிங் ஆல்ரவுண்டர் என்ற அழைக்கப்படும் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
பாண்டியா பேட்ஸ்மேனாக அதிகம் ரன்களை குவிக்கவில்லை. அவரது பந்துவீச்சின் மீதும் கேப்டனுக்கு நம்பிக்கை இருப்பது போல் தெரியவில்லை. அவர் இதே நிலையில் தொடர்ந்து பந்து வீசினால் வருங்காலத்தில் அணியில் தேர்வாவது கடினம்.
 
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் போல் சிறப்பான ஆட்டத்தை நாம் பாண்டியாவிடம் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் ஓவர் நைட்டில் கபில் தேவ் ஆக முடியவில்லை. எனவே, அவரை நாம் ஆல்ரவுண்டர் என அழைப்பதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.