1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2019 (12:47 IST)

தோனியின் ரிடயர்மெண்ட் குறித்து கமெண்ட் செய்த யுவராஜ் சிங்!

தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 
 
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் தோனி தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என பல கூறு வந்த நிலையில் தோனி ஓய்வு குறித்து தனது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார். இந்நிலையில் யுவராஜ் சிங் தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். 
 
யுவராஜ் கூறியதாவது, தோனி இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். அவர் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் இன்னும் சில நாட்கள் விளையாட வேண்டும் என முடிவு செய்தால் அதையும் நாம் மதிக்க வேண்டும். 
அதேபோல் தோனியுடன் ரிஷப் ப்ந்தை ஒப்பிடுவது சரியல்ல. தோனி ஒன்ரும் உஅடனே உருவாகவில்லை, அவர் சிறந்த வீரராக உருவாக சில காலம் தேவைப்பட்டது. அதேபோல், தோனிக்கு மாற்று வீரர் இந்திய அணியில் உருவாக இன்னும் சில காலங்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.