சனி, 28 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:51 IST)

டாஸ் வென்று பேட்டிங்கில் திணறும் இலங்கை: இந்தியாவுக்கு மீண்டும் முழு வெற்றியா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி திணறி வருகிறது.
 
இலங்கை அணி இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து இந்திய அணியின் பந்து வீசியது
 
இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து வருகின்றன. இலங்கை  இலங்கை அணியின் முதல் 4 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகி விட்டதை அடுத்து தற்போது அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்திய பவுலர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை மிக எளிதில் வீழ்த்தி உள்ளனர் இந்தநிலையில் இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று முழு வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது