வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (19:50 IST)

ஐபிஎல் மேல் ஆர்வம் போய்விட்டது: ஸ்ரீசாந்த்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதால், கடந்த 2013 ஆம் ஆண்டோடு இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்றே கூறலாம். முதல் ஐபிஎல் சீசனில் அதிகம் விக்கெட் வீழ்த்தி வீரர் இவர். 
 
இந்நிலையில், ஸ்ரீசாந்த் தற்போது ஐபிஎல் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஐபிஎல் கிர்க்கெட்டின் ரசிகனல்ல நான். ஆனால் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் ஐபிஎல் போட்டிகளை விரும்பிப் பார்ப்பதில்லை. எனக்கு ஐபிஎல் மேல் ஆர்வம் போய்விட்டது. 
 
என் மேல் பிசிசிஐ தடை விதித்ததற்காக நான் ஐபிஎல் கிரிக்கெட்டை வெறுக்கவில்லை. தடை குறித்து சோகமாகத்தான் உள்ளது ஆனால் நான் அதிலிருந்து நகர்ந்தாக வேண்டும். 
 
பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச போட்டிகள் ஆடும் மைதானங்களில் நான் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் என் மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறேன், அதில் எனக்கு மகிழ்ச்சியே என தெரிவித்துள்ளார்.