வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (10:06 IST)

சாய்னா நேவாலுக்கு வாழ்த்து கூறிய அனில் கும்ப்ளே

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற சாய்னா நேவாலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
 

 
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், 22 ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய  வீராங்கனை சாய்னாவும், ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின் நேருக்கு மோதினர்.
 
தங்கப்பதக்கத்தை வெல்ல கடுமையாக போராடிய சாய்னா நேவால் இறுதியில் தோல்வியை தழுவினார். இதனால் சாய்னா நேவாலுக்கு வெள்ளி பதக்கம் கிட்டியது. இவ்வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரராக உருவெடுத்துள்ளார், சாய்னா நேவால்.
 
இந்த அசத்தலான சாதனைக்காக சாய்னா நேவாலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அனில் கும்ப்ளே சாய்னா நேவாலுக்கு தனது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அருமையான ஆட்டம். நிச்சயமாக பெருமைபடுகிறேன். எனினும் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்திய வீராங்கனைக்கு வெற்றி காற்று வீசியது என கூறியுள்ளார்.