1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (14:52 IST)

பந்தை தட்டிவிட்ட வீரர்; பளார் என விட்ட ரொனால்டோ! – வைரலாகும் வீடியோ!

கால்பந்து போட்டியில் பந்தை தட்டிவிட்ட எதிரணி வீரரை ரொனால்டோ அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக கால்பந்து விளையாட்டில் முக முக்கியமானவராக அறியப்படுபவர் ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டு அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் ரொனால்டோ, க்ளப் ஆட்டங்களிலும் விளையடை வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் போர்ச்சுக்கல் அணியும், அயர்லாந்து அணியும் மோதிக் கொண்டன. அப்போது பெனால்டி கிக் ஒன்றிற்காக ரொனால்டோ தயாரானபோது எதிரணி வீரர் டாரா பந்தை தட்டிவிட்டுள்ளார்.
இதனால் கடுப்பான ரொனால்டோ மைதானத்திலேயே டாராவை பளார் என அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.