1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Rain stopped second test day 1 play

மழையால் தாமதமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டி!

#INDvENG
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் ஆட்ட முடிவு ட்ரா ஆனது.

இதனைத்தொடர்ந்து இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்க இருந்தது. டாஸில் இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ய ஆரம்பித்ததால் போட்டி தொடங்குவது தாமதமாகியுள்ளது.
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
ஆப்கானிஸ்தானத்தை அழிப்பதை நிறுத்துங்கள்… உலகத்தலைவர்களுக்கு ரஷீத் கான் வேண்டுகோள்!