1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஜூலை 2021 (07:57 IST)

காலிறுதிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் கிடைக்குமா?

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றதையடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
இந்தியாவுக்காக ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் தீபிகா குமாரி, பூஜா ராணி, மேரி கோம், பிவி சிந்து ஆகியோர் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சற்று முன் நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து டென்மார்க் வீராங்கனையை 21-15 மற்றும் 21 - 13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு போட்டிகளில் பிவி சிந்து வெற்றி பெற்றால் பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது