1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (21:17 IST)

5 நாட்கள் விளையாடி சாதனை படைத்த புஜாரா!!

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

 
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. 5 வது நாளான இன்று போட்டி டிராவில் முடிவடைந்தது.
 
இந்த டெஸ்ட் போட்டியில் 5 நாள்கள் விளையாடி புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார். 117 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார் புஜாரா. 
 
5 வது நாளாக இன்றும் புஜாரா தொடர்ந்து விளையாடி ஏற்கெனவே இருந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனையில் உலக அளவில் 8 வது இடத்தையும், இந்திய அளவில் 3 வது இடத்தையும் பிடித்துள்ளார். 
 
எம்,எல்.ஜெய்சிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி, புஜாராவுக்கு முன்னர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 
 
மூன்று இந்திய வீரர்களும் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் விளையாடி இந்த சாதனையை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.