1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (17:43 IST)

பாராலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரமோத் பகத் தங்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இதுவரை இந்தியா பாராலிம்பிக் போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது.#பிரமோத்பகத்