வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (16:08 IST)

விக்கெட்டை இழக்காமல் இலக்கை நெருங்கும் பாகிஸ்தான்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதியா?

India Pakistan
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டியை தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 153 என்ற இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான் அணி சற்று முன் வரை 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் 60 பந்துகளில் 66 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளதால் பாகிஸ்தான் அணி எளிதில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தினால் இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோதும்  என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran