1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 12 டிசம்பர் 2015 (15:20 IST)

சானியா மிர்சா அணி அசத்தல் வெற்றி

சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் என்று சொல்லப்படும் ஐபிடிஎல் தொடர் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து முண்ணனி வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 5 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஏசஸ் அணி 26-21 என்ற செட் கணக்கில் ஜப்பான் வாரியர்சை வீழ்த்தியது. 


 
 
இதில் கலப்பு இரட்டையரில் இந்தியன் ஏசஸ் அணியின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி 6-4 என்ற செட் கணக்கில் கணக்கில் ஹெர்பர்ட், பரோனி ஜோடியை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது, ஒற்றையரில் இந்திய ஏசஸ் வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த தொடரில் இந்தியன் ஏசஸ் அணி மொத்தம் 5 வது வெற்றியை பெற்றுள்ளது.
 
இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியன் ஏசஸ் வீரர் ரபெல் நடால், ஐக்கிய அரபு அமீரக ராயல்ஸ் வீரர் ரோஜர் பெடரருடன் விளையாட உள்ளார்.