1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 அக்டோபர் 2018 (17:03 IST)

பொளந்துகட்டும் இந்திய அணியினர்(333/3): திக்குமுக்காடி வரும் வெஸ்ட் இண்டீஸ்

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ். அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுக்கள் இழந்தாலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
 
மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் கே பாலின் 11.5வது ஓவரில் தவான்(38 ரன்கள் எடுத்த நிலையில்) அடித்த பந்தை பொவெல் கேட்ச் பிடித்து அவரை அவுட்டாக்கினார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோலி 16.4வது ஓவரில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோச் ஓவரில் அவுட்டானார். 
 
இதனால் ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருந்தனர். ஆனால் ரோகித் சர்மா, ராயுடு ஜோடி சிறப்பாக விளையாடியது. அதிலும் ரோகித் சிறப்பாக விளையாடி 137 பந்துகளுக்கு 162 ரன்களை குவித்து அவுட்டாகியுள்ளார். அதே சமயம் ராயுடு 98 ரன்களை குவித்துள்ளார். அடுத்ததாக தல தோனி களத்தில் இறங்கி விளையாடி வருகிறார்.