1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

கேப்டவுன் டெஸ்ட்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர், விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 79 ரன்கள் அடித்திருந்தார் என்பதும் புஜாரே 43 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர் ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பதும் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று 2-வது நாளில் தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்ய உள்ளது.