1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:51 IST)

ரோகித் அதிரடி சதத்தில் இந்திய அணி 260 ரன்கள் குவிப்பு

இந்தியா- இலங்கை அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.

 
இந்தியா - இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் 260 ரன்கள் குவித்தது.
 
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். 43 பந்துகளில் 118 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தோனி லோகேஷ் ராகுடன் இணைந்து ரன் ரேட்டை அப்படியே கொண்டு சென்றார். 
 
ராகுல் 89 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய பாண்டியா மற்றும் ஷிரியாஸ் ஐயர் வந்த வேகத்தில் வெளியே சென்றனர். தோனி 28 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. 
 
இதையடுத்து இலங்கை அணி 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலகுடன் விளையாட உள்ளது.