வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (22:15 IST)

78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மிக அபாரமாக பந்து வீசிய சயினி 3 விக்கெட்டுகளையும் ஷர்துர் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர் 
 
ஸ்கோர் விபரம்
 
இந்தியா: 201/6  20 ஓவர்கள்
 
கே.எல்.ராகுல்: 54
தவான்: 52
பாண்டே: 31
விராத்: 26
தாகூர்: 22
 
இலக்கை: 123/15.5 ஓவர்கள்
 
டிசில்வா: 57
மாத்யூஸ்: 31
பெர்னாண்டோ: 9
ஷங்கா: 9
 
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது