1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (17:47 IST)

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை: நடால் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடங்கும் இந்த ஒலிம்பி போட்டி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் உலகின் பல நாடுகளில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் வருவார்கள் என்பதும் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும், கோப்பை வெல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீரர் நடால் தெரிவித்துள்ளார்
 
விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று கூறியுள்ள நடால் என்னுடைய உடல்நலத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எனது குழுவுடன் விவாதித்த பிறகே இந்த முடிவுடன் எடுத்து உள்ளேன் என்றும் கூறியுள்ளார். இதனால் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்