வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (20:29 IST)

5 விக்கெட் வீழ்த்தி அசத்தும் பாண்டியா; தடுமாறும் இங்கிலாந்து

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 
 
தொடக்க வீரராக களமிறங்கிய குக் 29 ரன்கள் குவித்து வெளியேறினார். அதன்பின் வரிசையாக எல்ல பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தற்போது 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 
 
ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இன்றைய ஆட்ட நேர முடிவுக்கு முன்பே இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.