வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 டிசம்பர் 2025 (09:59 IST)

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையை குறிவைத்து எழும் விமர்சனங்களுக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
 
ஒரு நேர்காணலில் பேசிய சாஸ்திரி, "விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஜாம்பவான்கள். அந்த தகுதியுள்ள வீரர்களுடன் நீங்கள் குழப்பம் செய்யக்கூடாது" என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
 
யார் இந்த விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, "சிலர் அதை செய்கிறார்கள். இந்த இருவரும் சரியாக கவனம் செலுத்தி, சரியான பொத்தானை அழுத்தினால், குழப்பம் செய்பவர்கள் அனைவரும் மிக விரைவில் களத்தில் இருந்து மறைந்து போவார்கள்" என்று மறைமுகமாக சாடினார்.
 
சாஸ்திரியின் இந்த கருத்து, அஜித அகார்கர் தலைமையிலான தேர்வு குழுவிற்கும், அணி நிர்வாகத்திற்கும் விடுக்கப்பட்ட மறைமுக செய்தியாகப் பார்க்கப்படுகிறது. 2027 உலக கோப்பைத் திட்டங்களுக்காக இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற விவாதம் எழுந்த சூழலில், சாஸ்திரி நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
 
Edited by Mahendran