1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (07:04 IST)

தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்: இந்திய அணிக்கு ஹர்பஜன்சிங் அறிவுரை

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவெ இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் இந்திய அணியை குறிப்பாக கேப்டன் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு ஆறுதல் தரும் வகையில்  தோல்வியால் துவண்டு விடாமல் நேர்மறையான எண்ணத்துடன் கடைசி டெஸ்டை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

ஒரு அணியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது ஒரு கேப்டனின் உரிமை என்றும், விராத் கோஹ்லி காரணம் இல்லாமல் யாரையும் நீக்க மாட்டார் என்றும் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். மேலும் 3வது டெஸ்டி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-2 என்ற கணக்கில் முடிக்கும் என்று நம்புவதாகவும் ஹர்பஜன்சிங் தெரிவித்தார்