வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (13:15 IST)

புனேவில் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

புனேவில் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்கள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது 
 
புனேவில் இன்று பகலிரவு போட்டியாக முதல் ஒருநாள் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியில் ஆடும் 11 வீரர்களின் பெயர்களை தற்போது பார்ப்போம்:
 
இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணான்
 
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜான்னி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கர்ரன், டாம் கர்ரன், அடில் ரஷீத், மார்க்வுட்