1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:19 IST)

தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக இருப்பார் – முக்கிய நிர்வாகி தெரிவித்த தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி 2022 ஆம் ஆண்டு வரை நீடிப்பார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி விளையாடுவது உறுதியாக தெரியாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஐபிஎல் தொடர். செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடக்க இருக்கும் தொடரை மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். இந்நிலையில் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்கும் என சொல்லப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் ’இந்த ஆண்டு மட்டும் இல்லை. 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார். ஊடகங்கள் மூலம் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தை நான் தெரிவிக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.