ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 மே 2018 (21:44 IST)

ஐதராபாத் அணிக்கு 164 என்ற இலக்கை கொடுத்த டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களத்தில் இறங்கியது
 
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்கள் எடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷா 65 ரன்களும் கேப்டன் எஸ்.எஸ்.ஐயர் 44 ரன்களும் குவித்தனர். ஐதராபாத் அணியில் ரஷித்கான் 2 விக்கெட்டுக்களையும், கவுல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
 
இந்த நிலையில் 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். இந்த போட்டியில் டெல்லி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பாக அமையும், அதேநேரத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றால் சென்னை அணியை பின்னோக்கி தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடிக்கும்