1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:04 IST)

ஐபிஎல் புதிய அணிகள்… டெபாசிட்டே இத்தனைக் கோடியா?

ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் அறிமுகப்படுத்த பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஐபிஎல் தொடரில் இப்போது 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் அறிமுகப்படுத்தப் பட உள்ளன. குஜராத் அணியை வாங்க அதானி குழுமம் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய அணியை வாங்க விரும்புவஎர்கள் அதற்காக 75 கோடி ரூபாய் டெபாசிட்டாக கட்டவேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளதாம். மேலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே விருப்ப மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.