வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (21:39 IST)

இந்திய அணியை கண்டால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயம்: சொல்வது யார் தெரியுமா??

இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது ஆஸ்திரேலியா வீரர்கள் பயப்படுவதாக ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேவிட் சாகேர் இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது, செய்ய முடியாத சில விஷயங்களை செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள். வீரர்கள் அதிக அளவில் சுதந்திரத்துடன் விளையாட முயற்சி செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.