1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (13:44 IST)

24 ரன்களில் 6 விக்கெட்: இந்தியாவிடம் சரண்டர் ஆன இலங்கை

asian cup final
24 ரன்களில் 6 விக்கெட்: இந்தியாவிடம் சரண்டர் ஆன இலங்கை
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது இலங்கை அணியின் பேட்டிங் செய்து வருகிறது 
 
இந்திய அணி வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி வீராங்கனைகளின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்து வருகின்றன. அந்த அணி 8 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் ரேணுகா சிங் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran