ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (10:37 IST)

தமிழக மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்! – வங்க கடலில் பயங்கரம்!

வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் காரைக்கால், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் வங்க கடலில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறாக வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் பலர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கியதுடன், அவர்களது வலை உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K