1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (17:07 IST)

பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இந்திய அணி நரகத்திற்கு போகட்டும்: மியாண்டட்

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் அந்த அணி நரகத்திற்கு போகட்டும் என முன்னாள் பாகிஸ்தான் அணியின் ஜாவித்மியாண்டட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடத்துவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை என்று கூறியதை அடுத்து வேறு வழி இன்றி பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. 
 
பாகிஸ்தானில் நான்கு போட்டிகளும் மற்ற ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் அந்த அணி நரகத்திற்கு போகட்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மியான் மியாண்டட் சாபம் விட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva