1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (11:08 IST)

வார்த்தையில் மோதிக்கொண்ட அஸ்வினும் டிம் சவுத்தியும்… விலக்கிவிட்ட தினேஷ் கார்த்திக்!

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கவனத்தைப் பெற்றது.

நேற்று முதலில் நடந்த டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகக் குறைந்த ரன்கள் கொண்ட போட்டியாக சென்றதால் உப்புச் சப்பில்லாமல் சென்றது. ஆனால் வீரர்கள் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

முதலில் பேட் செய்த டெல்லி அணியில் 20 ஆவது ஓவரில் அஸ்வின் அவுட் ஆகும் போது பந்துவீச்சாளர் டிம் சவுத்தி ஏதோ சொல்ல அதனால் கடுப்பான அஸ்வின் அவரிடம் சென்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார். இருவரின் பேச்சும் ஒரு கட்டத்தில் எல்லை மீற குறுக்கே புகுந்த தினேஷ் கார்த்திக் அஸ்வினை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.