1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:59 IST)

ஐபிஎல் ஆர்சிபி அணியின் புதிய பயிற்சியாளர் இவர் தான்.. அணி நிர்வாகம் அறிவிப்பு..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாவே நாட்டின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர்,நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஐபிஎல் தொடரில் இதுவரை 16 முறை பங்கேற்று ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் அந்த அணி நிர்வாகம் புதிய முயற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கண்டிப்பாக ஆர்சிபி அணியை ஆண்டி பிளவர், சாம்பியன் பட்டம் பெற வைப்பார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva