சனிப்பெயர்ச்சி பலன்களைக் கணிக்கும்போது, சனியை மட்டும் கணக்கில் கொண்டால் போதாது. குரு, ராகு நிலைகளையும் கவனத்தில் கொல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் சனி தரும் பலன்களை மாற்றும் வல்லமையுள்ளவர்கள். இவற்றைக் கணக்கிட்டு பலன் எழுதப்பட்டுள்ளது. சிலருக்கு சுமாரான பலன் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரவர் ஜாதகத்தில் தசாபுத்தி சிறப்பாக இருந்தால், நல்ல பலன் கிடைக்கும். பரிகாரத்தை அவரவர் வசதிக்கு ஏற்ப செய்தால் போதும்.