1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Youtuber Maridhas Arrested Over Defamatory AI Post on Minister Keerthana, Released on Conditional Bail

கைதான மாரிதாசுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்.. தொடர்ந்து விமர்சனம் செய்வாரா?

யூடியூபர் மாரிதாஸ் கைது
பெண் அமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக, பிரபல யூடியூபர் மாரிதாஸ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். 
 
மதுரையை சேர்ந்த 42 வயதான மாரிதாஸ், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து 'எக்ஸ்' தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இழிவான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதனை எதிர்த்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரைக்கு சென்று அவரது இல்லத்தில் வைத்து மாரிதாஸை கைது செய்தனர். தான் கைது செய்யப்பட உள்ள தகவலையும் மாரிதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
 
கைது செய்யப்பட்ட அவர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், மாரிதாஸை நிபந்தனை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார். ஏ.ஐ. தொழில்நுட்பத் தவறான பயன்பாடு மற்றும் சமூக வலைதள அவதூறுகள் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் நீங்க தனி!.. இஸ்ரேலை எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்!..