1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (09:43 IST)

வீக் எண்டில் ஏற்காடிற்கு தடா... சேலம் மாவட்ட ஆட்சியர்!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல சேலம் மாவட்ட ஆட்சியர் தடை.

 
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில்  ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டது. தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் தளர்வுகள் உள்ள நிலையில், இதமான சூழ்நிலை உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். 
 
இதனால் சுற்றுலாத் தளங்கள் மீண்டும் கலைக்கட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் சனி, ஞாற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல சேலம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் ஏற்காடு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.