1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (12:23 IST)

தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக வரும் 3 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 3, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.